
ஜடேஜாவுக்கு ஆபத்து
ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்த வந்தாலும், உடனே இந்திய அணிக்குள் வர முடியாது. அவருடைய இடத்திற்கு அக்சர் பட்டேலால் ஆபத்து வந்த விட்டது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அவர் கலக்கி வருகிறார். முதல் டி20 போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். இனி அவருடைய பேட்டிங் திறமை அதிகமாக தான் ஆகும். இனி மேலும் இது போன்ற ஆட்டத்தை அக்சர் பட்டேலிடம் எதிர்பார்க்கலாம்.

நல்ல தலைவன்
ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு ஒரு நல்ல தலைவனாக உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தோல்வியின் மூலம் அவர் நிறைய விஷயங்களை கற்று கொண்டு இருப்பார். நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கும். பந்துவிச்சாளர்களை ஹர்திக் அணுகும் முறை. போட்டியை கையாளும் முறை எல்லாம் ஹர்திக் சிறப்பாக செயல்பகிறார். டாஸ் விசயத்தில் தவறு செய்கிறார் என்பதை ஏற்க முடியாது.

கேப்டன் என்ன செய்வார்?
காரணம், பந்துவீச்சாளர்கள் நோ பால் வீசினால் கேப்டனால் என்ன செய்ய முடியும். இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் அந்த தவறை செய்யாமல் இருந்தால், இந்நேரம் இந்தியா வென்று இருக்கும். எனவே ஹர்திக் சவாலை தேர்ந்து எடுக்கும் முறை பாராட்டுக்குரியது. ஆர்ஸ்தீப் சிங் காயத்திலிருந்து குணமடைந்த நேரடியாக விளையாட வைக்கப்பட்டு இருக்கிறார்.

கம்பீர் யோசனை
இதனால் தான் ஆர்ஸ்தீப் சிங் நோ பால் வீசி இருக்கிறார். வலை பயிற்சியின் போது நோ பால் வீசாமல் பயற்சி எடுத்ல் தான் போட்டியிலும் நோ பால் வீசாமல் இருக்க முடியும். இதனை எல்லாம் பந்துவீச்சசாளர்கள் தான் பார்க்க வேண்டும். காயமடைந்த வீரர்களை இனி உள்ளூர் போட்டியில் விளையாட வைத்து, அவர்கள் தங்களது உத்வேகத்தை மீட்ட பிறகு, இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள். அது தான் சரியான முறை என்று கம்பீர் கூறினார்.


Click it and Unblock the Notifications











