அகமதாபாத்: 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியின் விக்கெட் கீப்பரான பிஸ்லா எப்படி சென்னை அணிக்கு எமனாக அமைந்தாரோ, அதேபோன்ற ஒரு ஆட்டத்தை குஜராத் அணியின் விக்கெட் கீப்பரான சாஹா ஆடி சென்றுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இதன் பின்னர் குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் - சாஹா தொடக்கம் கொடுத்தனர்.

இதில் 2வது ஓவரின் போது சுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சஹர் தவறவிட்டார். அதேபோல் தீபக் சஹர் பந்துவீச்சில் அவரிடமே கொடுத்த கேட்சையும் தவறவிட்டார். இதனை பயன்படுத்தி அதிரடியாக ஆடிய இருவரும் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 62 ரன்களை சேர்த்தனர். இந்த நிலையில் சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தை சாஹா கையில் எடுத்தார்.
அதிரடியாக ஆடிய இவர், 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் இதேபோன்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பரான பிஸ்லா ஆட்டத்தை மாற்றிக் காட்டினார். அதுபோல் சாஹாவின் சென்னை அணியிடம் இருந்து ஆட்டத்தை கொஞ்சம் கொஞ்சம் குஜராத் அணி பக்கம் திருப்பினார். இந்த நிலையில் சிறப்பாக ஆடிய சாஹா 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2014ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் சதம் விளாசிய சாஹா, இந்த இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.