அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது குஜராத் அணியில் முதல் முறையாக விளையாடிய கேன் வில்லியம்சன் , காலை உடைத்து கொண்டார். குஜராத் அணியின் பேட்டிங் வரிசையில் முக்கியமான வீரராக வில்லியம்சன் இருந்தார்,
சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் வில்லியம்சன், குஜராத் அணிக்கு ஆங்கர் ரோலும் செய்ய கூடியவர். தற்போது அணியில் டேவிட் மில்லரும் இல்லாத நிலையில் , குஜராத் பேபட்டிங்கில் முதல் 6 பேரில் வில்லியம்சன் மட்டும் தான் வெளிநாட்டு பேட்ஸ்மேனாக இருந்தார்.

இந்த நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், அவரை கட்டுப்படுத்த முடியாமல் குஜராத் அணி வீரர்கள் களமிறங்கினர். இந்த நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட் அடித்த பந்து சிக்சர் லைனுக்கு சென்றது.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கேப்டன் வில்லியம்சன் , கேட்ச் பிடிப்பதற்காக ஒரு ஜம்ப் செய்தார். ஆனால் சிக்சர் லைனை தொட்டுவிடுவோம் என்று நினைத்த வில்லியம்சன், பந்தை தூக்கி இருந்தார். ஆனால் பந்து உருண்டு கொண்டு மீண்டும் பவுண்டரி லைனை தொட்டது.

இதனால் இதற்கு நடுவர் 4 ரன்கள் கொடுத்தார். ஆனால் ஜம்ப் செய்த விலலியம்சனிக் கால் கீழே விழுந்தும் மடங்கியது. இதனால் வில்லியம்சன் வலியால் துடித்தார். இதனையடுத்து , மருத்துவக்குழு அவரை பரிசோதித்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.