|
ஏமாற்றிவிட்டார்கள்
கோபக்காரரான ஹர்திக் பாண்யாதான் முதலில் சண்டையை ஆரம்பித்து டிவிட் போட்டுள்ளார். "வாழ்க்கையில் சில நேரங்களில், உங்களோடு நெருக்கமாக உள்ளவர்கள்தான், உங்களை அதிகம் ஏமாற்றிவிடுவார்கள். இது கூல் இல்லை, ப்ரோ!" என டிவிட் செய்திருந்தார்.
ரசிகர்களுக்கு குழப்பம்
முதலில் இது யார் குறித்தோ போடப்பட்ட டிவிட் எனதான் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அவரது சகோதரர் க்ருனால் பாண்ட்யா, ஹர்திக்கின் டிவிட்டுக்கு போய் பதில் கொடுத்ததன் மூலம், இது அண்ணன்-தம்பி சண்டை என தெரியவந்தது ரசிகர்களுக்கு.
|
சகோதர யுத்தம்
க்ருணால் பாண்ட்யா கூறுகையில் "முதலில் இது நடந்திருக்க கூடாது. சில காரணங்களால் நான்தான் பெரிய அண்ணன். இதை பெரிய விஷயமாக செய்ய வேண்டாம்" என கூறியுள்ளார் க்ருணால் பாண்ட்யா.
|
பாண்டியர்களை கேலி செய்யும் சேவாக்
இரு பாண்டியர்களும் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு புரியவில்லை. ஆனால் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இதை கேலி செய்யும் வகையில் டிவிட் போட்டுள்ளார்.
இது தேவையா?
ஐபிஎல் சீசன் முக்கிய கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில் இரு சகோதரர்களும் பொது வெளியில் முட்டிக்கொள்வது அம்பானி அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வீட்டுக்குள் போய் சண்டை போடுங்கப்பா என ரசிகர்கள் அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.