ஆமாம் சண்டை போட்டார்.. கோலி சொன்ன அந்த பகீர் வார்த்தை.. இந்திய டீமில் "ஸ்கை"..இடம்பிடித்தது எப்படி?
சென்னை: இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் இடம் பிடித்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக நீண்ட கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட டி 20 அணியில் சூர்ய குமார் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

எப்படி
கடந்த ஐபிஎல் தொடரின் போதே கோலிக்கும் சூர்ய குமார் யாதவிற்கு இடையில் மோதல் ஏற்பட்டு இருந்தது . மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்தில் மோதல் ஏற்பட்டது. அந்த போட்டிக்கு முதல்தான் ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது.

ஏன்
இந்த ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் சூர்யகுமார் யாதவ் இல்லை என்பதால் கோலிக்கும் இவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. களத்தில் இவர்கள் இருவரும் உரசிக்கொண்டது பெரிய அளவில் சர்ச்சையானது. அதன்பின் கோலிக்கும் ரோஹித்துக்கும் கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஆஸி தொடர்
இதனால் சூர்ய குமார் யாதவ் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் சூர்ய குமார் யாதவ் தொடர்ந்து கோலியிடம் சமாதானம் பேசி வந்தார். டிவிட்டரில் கோலியை பாராட்டி அவருக்கு சமாதான தூது விட்டுக்கொண்டு இருந்தார்.

கோலி உண்மை
இதில் கோலி உண்மையில் மனம் இறங்கிவிட்டார் என்கிறார்கள். அதோடு சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆஸ்திரேலிய தொடரில் சரியாக ஆடாத காரணத்தால் சூர்ய குமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோலி கருதி உள்ளார். இதனால்தான் இவரின் பெயர் அணியிலிருந்து எடுக்கப்பட்டது என்கிறார்கள்.

சண்டை போட்டார்
ஆம் சூர்ய குமார் யாதவ் சண்டை போட்டார். ஆனால் அவரிடம் திறமை இருக்கிறது. இதனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். நன்றாக ஆடினால் டி 20 உலகக் கோப்பை தொடரில் இவரை பயன்படுத்தலாம் என்று கோலி நினைப்பதாக கூறுகிறார்கள் .


Click it and Unblock the Notifications