
ராகுல் திணறல்
இறுதிக்கட்டத்தில் 3 விக்கெட்டுகளை பறி கொடுத்தாலும் ராகுல், சாம் கர்ரன் வெற்றி பெறச் செய்தனர். இந்த ஆட்டத்தில் ராகுல் தொடக்கத்தில் திணற, கெய்ல் ஆட்டமிழந்த பிறகு வந்த மயங்க் அகர்வால் அழகாக ஆடி ரன்குவிப்பை தொடங்கினார்.

55 ரன்கள்
ராகுலை காட்டிலும் சூப்பராக ஆடிய மயங்க் அகர்வால் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது பெற்ற கே.எல்.ராகுல் கூறியிருப்பதாவது:

அரைசதங்கள்
முதல் 2 போட்டிகளில் எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை. நான் எடுக்கும் அரைசதங்கள் அனைத்தும் வெற்றி இலக்கை நோக்கி செல்லும் போது கிடைத்திருக்கிறது.

பாராட்டுக்குரிய ஆட்டம்
மயங்க் அகர்வால், விரலில் காயம்பட்டு கடும் வலியில் இருந்தார், ஆனாலும் அவர் சிறப்பான இன்னிங்ஸை ஆடியது பாராட்டுக்குரியது. சிக்சர்கள் அடிப்பது கடினம் என்று கர்ரனிடம் கூறினேன். ஆனால் அவர் சிக்ஸ் அடிக்க முயற்சித்தார். அந்த பந்துகளும் இடைவெளிகளில் சென்றது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











