Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்தியா கேவலமாக நடந்துக்கொள்கிறது” ஆஸி அணியை நம்ப வைத்து ஏமாற்றிய அதிகாரி.. முன்னாள் வீரர் விளாசல்

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் இயான் ஹீலி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்த்த சூழலில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. இதனால் போட்டி 3வது நாளிலேயே முடிவு பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இதனையடுத்து 2வது டெஸ்டிலாவது பதிலடி தர வேண்டும் என ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் புதிவித திட்டத்தை போட்டார். அதாவது நாக்பூர் மைதானத்தில் 3 நாட்களிலேயே போட்டி முடிந்ததால் அந்த பிட்ச்-ஐ அடுத்த 2 நாட்களுக்கு பயிற்சிகாக கொடுக்குமாறு விதர்பா மைதான நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதே போன்ற பிட்ச் தான் மற்ற டெஸ்ட்களிலும் இருக்கும் என்பதால் இங்கு பேட்டிங் பயிற்சி கொடுக்க விரும்பினார்.

பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

எப்படியும் பிட்ச்-ஐ கொடுப்பார்கள் என்று நம்பி ஓட்டல் அறைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது, பிட்ச் முழுவதும் தண்ணீரை விட்டு ஊழியர்கள் மாற்றி அமைத்தனர். ஒரு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு பிட்ச்-ல் தண்ணீர் விட்டு தன்மையை மாற்றுவது சகஜம் தான். ஆனால் ஒருவர் கோரிக்கை வைத்த பின்னரும் ஏன் அவசர அவசரமாக பிட்ச்-ஐ மாற்றினர் என ஆஸ்திரேலிய வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

முன்னாள் வீரர் விமர்சனம்

முன்னாள் வீரர் விமர்சனம்

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் இயான் ஹீலி கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் நாக்பூர் விக்கெட் பயிற்சிக்காக தேவை என ஆஸ்திரேலியா கோரிக்கை வைத்த பிறகும் இப்படி செய்தது கேவலமாக உள்ளது. இது நல்லதுக்கே கிடையாது. கிரிக்கெட் விளையாட்டிற்கு முற்றிலும் நல்லதல்ல. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த விவகாரத்திலாவது தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 என்ன தவறு இருக்கு?

என்ன தவறு இருக்கு?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணி பயிற்சி செய்ய பிட்ச்-ஐ கேட்டது தவறா? இதற்கு சட்டென்று தண்ணீரை ஊற்றி தன்மையை மாற்றியது கொடுமையான ஒன்று. இந்தியா தனது மனநிலையை முன்னேற்றிக்கொண்டே தீர வேண்டும், இல்லையென்றால் தவறாக தான் செல்லும் என இயான் ஹீலி கூறியுள்ளார்.

Story first published: Monday, February 13, 2023, 18:32 [IST]
Other articles published on Feb 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+