லண்டன்: ரோஹித் மனைவி ஒரு கேட்ச்சிலிருந்து தப்பிப் பிழைத்ததை அவரது மனைவி பதைபதைப்புடன் கண்டு ரசித்தது வைரலாகி வருகிறது.
இந்தியா இலங்கை இடையிலான சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா அபாரமாக ரன் குவித்தது. இதில் ரோஹித் சர்மா அரை சதம் அடித்தார்.

அவர் தனது 50வது ரன்னை சிக்ஸர் அடித்து பூர்த்தி செய்தபோது அரங்கே களை கட்டியது. குறிப்பாக அவரது மனைவி ரித்திகா குதூகலத்துடன் அதைப் பார்த்தார். ஆனால் பந்து கேட்ச் ஆவது போலப் போனதைப் பார்த்த ரித்திகா மூச்சு கூட விடாமல் பதைப்புடன் பந்து போவதைப் பார்தார்.
ஆனால் பந்து பீல்டரிடமிருந்து தப்பி எல்லைக் கோட்டைத் தாண்டி சிக்ஸராக மாறியபோது அவர் நிம்மதிப் பெருமூச்சுடன் உற்சாகமாக எழுந்து நின்று அதைக் கொண்டாடினார்.