Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு விழுந்த அடி.. ஐசிசி கடும் தண்டனை.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 11 புள்ளிகள் குறைப்பு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் முழுமையாக ஒயிட்வாஷ் தோல்வியடைந்து அவமானத்தைச் சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மேலும் ஒரு அடியைக் கொடுத்துள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக, பாகிஸ்தான் வீரர்களுக்கு 50 சதவீத போட்டி கட்டண அபராதமும், 11 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைப்பும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

பர்மிங்காம் டெஸ்டில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பாகிஸ்தான் அணி 11 ஓவர்கள் குறைவாக வீசியது நடுவர்களின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. ஐசிசி நடத்தை விதிகளின்படி ஒரு ஓவருக்கு 5 சதவீதம் வீதம் அதிகபட்சமாக 50 சதவீத ஊதிய அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், வீசத் தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் தலா 1 புள்ளி வீதம் பாகிஸ்தானின் புள்ளிப் பட்டியலில் இருந்து 11 புள்ளிகள் அதிரடியாகக் கழிக்கப்பட்டன.

ICC Slaps Pakistan with Heavy Penalty and 11 WTC Points Deduction After 3-0 Series Loss to England

ஐசிசி போட்டி நடுவர் ரஞ்சன் மடுகலே இந்த கடுமையான தண்டனையை வழங்கியுள்ளார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வெறும் 4.63 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி கடைசி இடமான 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது.
இந்தத் தொடரில் லீட்ஸ் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்திலும், எட்ஜ்பாஸ்டனில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அடுத்தடுத்து படுதோல்வி அடைந்தது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பெற்றுள்ளது.

6000 ரன்கள் அடித்து அபிஷேக் சர்மா பிரம்மாண்ட டி20 சாதனை.. ஆசியாவில் நம்பர் 1.. அதிவேக ரெக்கார்டு

6000 ரன்கள் அடித்து அபிஷேக் சர்மா பிரம்மாண்ட டி20 சாதனை.. ஆசியாவில் நம்பர் 1.. அதிவேக ரெக்கார்டு

இங்கிலாந்து மண்ணில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக முழுமையாக ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, அடுத்ததாக வரும் நவம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிராக ராவல்பிண்டி மற்றும் லாகூரில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஐசிசியின் இந்த அதிரடி நடவடிக்கை கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, September 14, 2026, 14:09 [IST]
Other articles published on Sep 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+