
முதலில் தடுமாற்றம்
கேஎல் ராகுல் வழக்கம் போல் 12 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் அவர் ரிவ்யூ செய்து இருந்தால் கூட தப்பித்து இருக்கலாம். ஆனால் ராகுல் மேதாவித்தனமாக ரிவ்யூ செய்யாமல் பெவிலியனுக்கு சென்றார். ரோகித் சர்மா தடுமாறினாலும் பிறகு அதிரடியை காட்டினார்.

2 முறை கேட்ச்
ரோகித் சர்மாவும் இரண்டு முறை தூக்கி அடித்தும் கிடைத்த கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர்கள் வீணடித்தனர். இதனால் இதனை பயன்படுத்தி கொள்ள விரும்பிய ரோகித் சர்மா, தனது வழக்கமான அதிரடியை காட்டினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது.

சிக்சர் சாதனை
39 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா, 53 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதன் மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன்பு யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் அடித்திருந்தார். தற்போது ரோகித் சர்மா 34 சிக்சரை அடித்திருக்கிறார்.

ரோகித்துக்கு வாய்ப்பு
ஒட்டு மொத்தமாக முதலிடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார். அவர் 63 சிக்சர் அடித்திருக்கிறார். இந்த தொடரில் ரோகித் அதிரடியை காட்டி சிறப்பாக விளையாடினால் 50 சிக்சர்களை அடிக்க வாய்ப்புள்ளது. இந்த இன்னிங்சின் போது ரோகித்தின் 2 கேட்சை நெதர்லாந்து வீரர்கள் தவறவிட, நடுவர் ஒரு முறை தவறாக அவுட் வழங்க, அதனை டிஆர்எஸ் மூலம் ரோகித் மாற்றினார்.


Click it and Unblock the Notifications











