அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு களிக்க உள்ளார்கள்.
இதனிடையே இதே மைதானத்தில் ஆறு மாதத்திற்கு முன்பு இரண்டு இந்திய வீரர்கள் செய்த சம்பவம் வரலாற்றில் பொறிக்கப்பட்டவை. அதனை தமிழக ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.
