மும்பை : டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி இடையிலான நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 42 ரன்களை அடித்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 59 ரன்களில் ஆர்சிபியை வெற்றி கொள்ள பிரித்வி ஷா முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில் பிரித்வி ஷா அடித்த ஒரு சிக்ஸ் நம்ப முடியாததாக இருந்ததாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி இடையில் நேற்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல்லின் 19வது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா 23 பந்துகளில் 42 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இந்நிலையில், நவ்தீப் சைனியின் பந்தில் 3வது ஓவரில் பிரித்வி ஷா அடித்த சிக்ஸ் மிகவும் வியப்பானதாக இருந்ததாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் எச்சிலை பயன்படுத்த முயன்ற விராட் கோலியின் செயல்பாட்டிற்கு சமயத்தில் இப்படி நடக்கும் என்றும் கூறியுள்ளார்.