இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் சம்பிரதாய ஆட்டமாக நாளைய போட்டி நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடைசி டி20 போட்டியில் பிளேயிங் லெவனின் மாற்றத்தை மேற்கொள்ள ரோகித் சர்மா முடிவெடுத்து இருக்கிறார். இந்திய அணி t20 உலக கோப்பை தொடருக்கு முன்பு விளையாடப் போகும் கடைசி சர்வதேச டி20 போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
