Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு வில்லனாக மாறிய ஒற்றை ஆப்கான் வீரர்.. எங்கும் ரஷித்! எதிலும் ரஷித்!

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், இந்திய பேட்ஸ்மேன் திலக் வர்மாவை ரன் அவுட் செய்து அசத்தினார். இந்திய இன்னிங்ஸின் 12-வது ஓவரின் முதல் பந்தில் இந்த விக்கெட் விழுந்தது. ரஷித் கான் வீசிய லெக்-பிரேக் பந்தை எதிர்கொண்ட திலக் வர்மா, அதை மிட்-விக்கெட் திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓட முயன்றார்.

அப்போது சஞ்சு சாம்சனுக்கும் திலக் வர்மாவுக்கும் இடையே ஓடுவதில் சற்று குழப்பம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்திய ரஷித் கான், பந்தை வேகமாக எடுத்து, உடனே திரும்பி, துல்லியமாக வீசி திலக் வர்மாவை ரன் அவுட் செய்தார்.

Rashid Khan

மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய திலக் வர்மா, 5 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 11.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

IND vs AFG: ஸ்ரேயாஸ் செய்த சொதப்பல்.. 260 ரன் வர வேண்டிய ஸ்கோர்.. பந்தை வீணடித்த கேப்டன்!

IND vs AFG: ஸ்ரேயாஸ் செய்த சொதப்பல்.. 260 ரன் வர வேண்டிய ஸ்கோர்.. பந்தை வீணடித்த கேப்டன்!

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக அபிஷேக் சர்மா வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடக்க, இந்திய அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா, 30 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இது ஒரு இந்திய வீரரின் அதிவேக சர்வதேச டி20 சதமாகும்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 59 பந்துகளில் 142 ரன்கள் சேர்த்தது. இறுதியாக 10-வது ஓவரில் ரஷித் கான் பந்துவீச்சில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். பின்னர் லாங்-ஆஃப் திசையில் ரஷித் கான் பிடித்த சிறப்பான கேட்ச் மூலம் அவர் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி கடவுள் தந்த பரிசு.. ஸ்ரேயாஸ் தலைமையிலான அணி அபாயகரமாக உள்ளது- ரஷித் கான் பாராட்டு

Also Read

வைபவ் சூர்யவன்ஷி கடவுள் தந்த பரிசு.. ஸ்ரேயாஸ் தலைமையிலான அணி அபாயகரமாக உள்ளது- ரஷித் கான் பாராட்டு

தொடர்ந்து சிவம் துபே 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது, லாங்-ஆன் திசையில் இருந்து இடதுபுறமாக ஓடிவந்து ரஷித் கான் மீண்டும் ஒரு அற்புதமான கேட்ச்சை எடுத்து அசத்தினார். இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷித் கானின் இந்த அபார செயல்பட்டால் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Story first published: Thursday, September 17, 2026, 21:49 [IST]
Other articles published on Sep 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+