Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிங்கு சிங்கை தோனியுடன் ஒப்பிடுவது ஏன்? கேகேஆர் அணியில் எப்படி இருந்தார் தெரியுமா.. அஸ்வின் பேச்சு!

சென்னை: இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங், கேகேஆர் அணியில் இருந்த நாட்கள் குறித்து சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவாகி வருகிறார் ரிங்கு சிங். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸ், 2 ஃபோர்ஸ் உட்பட 69 ரன்களை விளாசி அசத்தினார். 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது களமிறங்கிய ரிங்கு சிங், உடனடியாக ஃபினிஷர் ரோலை எடுத்து கொண்டார்.

IND vs AFG : Ravichandran Ashwin spoke about the Rinku Singh performance and early days of KKR in IPL tournament

விக்கெட்டை காப்பாற்றியதோடு, கட் ஷாட் மூலம் சில பவுண்டரிகளையும் எளிதாக விளாசினார். ரோகித் சர்மாவை ஒரு பக்கம் அதிரடியாக விளையாட விட்டு, நிதானமாக ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்தில் ஃபினிஷிங் கொடுக்க வேண்டிய நிலை வந்த போது, 18வது ஓவருக்கு பின் சிக்சரை விளாசி தொடங்கினார் ரிங்கு சிங். அதில் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்தது பலரையும் மிரள வைத்துள்ளது.

விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் அதிக தன்னம்பிக்கை கொண்ட வீரராக உருவாகி வருகிறார் ரிங்கு சிங். தனது திறமை என்ன, பலம், பலவீனம் என்று அத்தனையையும் இளம் வயதிலேயே புரிந்து கொண்டு அதற்கேற்ப களத்தில் திட்டங்களை உருவாக்கி பேட்டிங் செய்வது தான் அவரை தனித்துவமான வீரராக மாற்றியுள்ளது.

ஆஃப்கானிஸ்தான் தொடரில் ரிங்கு சிங் ஆட்டம் குறித்து இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், தோனி இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படி விளையாடுவாரோ, அப்படி விளையாடி வருகிறார் ரிங்கு சிங். தோனி மிகப்பெரிய வீரர், அவருடன் ஒப்பிடலாமா என்று சந்தேகம் தான். ஆனால் ரிங்கு சிங்கின் நிதானம் தான் தோனியுடன் ஒப்பிட வைக்கிறது.

ஏனென்றால் உத்தரப் பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஏராளமான ரன்களை விளாசியுள்ளார். அதன்பின் கேகேஆர் அணிக்காக ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார். ஒருமுறை அந்த அணியினருடன் பேசும் போது, ரிங்கு சிங் பல ஆண்டுகளாக பெஞ்சில் தான் இருந்தார். ஆனாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பில்லை என்று தெரிந்தும், ஒருநாளும் பயிற்சியை ரிங்கு சிங் மிஸ் செய்ய மாட்டாராம். வலை பயிற்சியின் போது பேட்ஸ்மேன்கள் பந்துகளை விளாசி தள்ளுவார்கள்.

அப்படி விளாசப்படும் பந்துகளை ஓடி ஓடி எடுத்து வந்து பவுலர்களிடம் கொடுப்பார் என்று கூறினார்கள். அதன்பின் கேகேஆர் அணியில் வாய்ப்பு கிடைத்து திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இப்போது ரிங்கு சிங், No Fear.. When i am here என்று சொல்லி சொல்லி அடிக்கிறார். டி20 கிரிக்கெட்டில் ஆர்வத்தை தூண்ட வேண்டும், அதேபோல் கன்சிஸ்டன்சி இருக்க வேண்டும். அதனை செய்வது எளிதல்ல. ரிங்கு சிங் இரண்டையும் சிறப்பாக செய்வதாக பாராட்டியுள்ளார்.

Story first published: Friday, January 19, 2024, 11:20 [IST]
Other articles published on Jan 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+