சென்னை: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனின் சேப்டர் ஓவர் என்றும், இனியும் அவருக்கு ஆதரவளிப்பது பைத்தியக்காரத்தனம் என்றும் முன்னாள் வீரர் விவி கிரி விமர்சித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு பல்வேறு கதவுகளை திறந்துள்ளது. இந்திய அணியை அனுபவ வீரர் ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும், விராட் கோலி எப்படி மாற்றமடைந்துள்ளார், டி20 உலகக்கோப்பை தொடருக்கான பேட்டிங் லைன் அப், இடதுகை பேட்ஸ்மேன்களின் தேவை ஏன், ஆஃப் ஸ்பின்னர், லெக் ஸ்பின்னர் என்று இந்திய அணிக்கு பல்வேறு முடிவுகள் கிடைத்துள்ளது.

அதேபோல் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவையும் ரோகித் சர்மா எடுத்துள்ளதாகவே தெரிகிறது. ஏனென்றால் முதல் 2 போட்டிகளிலும் ஜித்தேஷ் சர்மாவே களமிறக்கப்பட்டார். அதன்பின் கடைசி போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் 5வது வீரராக வந்த சஞ்சு சாம்சன், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்கா மண்ணில் விளாசிய சதம் காரணமாகவே சஞ்சு சாம்சனுக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் சோபிக்க தவறியுள்ளார். இதுகுறித்து தமிழக கிரிக்கெட் வீரர் விவி கிரி அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், டபுள் சூப்பர் ஓவர் ஆட்டத்தை பார்க்கபே அரிதான விஷயம் தான். அந்த நேரத்திலும் ரோகித் சர்மா ரிட்டையர்ட் அவுட்டாகியது அவரின் அறிவு கூர்மையை காட்டுகிறது.