
3வது போட்டி
இந்திய அணி கடந்த 4 ஆண்டுகளாக ஒரு தொடரை கூட சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வருகிறது. இதே போல நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் உலகின் நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் அணியாக இடம்பெறுவார்கள். எனவே சொந்த மண்ணில் தோற்றுவிடக்கூடாது என ரோகித் சர்மாவின் படை தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு உதவியுள்ளார் எம்.எஸ்.தோனி.

உதவும் தோனி
இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் பயிற்சிகளுக்காக சேப்பாக்கம் மைதானத்தில் தான் முகாமிட்டுள்ளார். இதனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தோனியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது சென்னை மைதானத்தில் தற்போது களம் எப்படி உள்ளது என கேட்டு தெரிந்துக்கொண்டுள்ளனர். தோனி கடந்த 20 நாட்களாக இங்கு தான் பயிற்சி பெற்று வருவதால் அவருக்கு நன்றாக இந்த சூழல் தெரியும்.

பிட்ச் குறித்த அட்வைஸ்
சென்னை மைதானத்தின் பிட்ச் வழக்கமாக ஸ்லோவான ஒன்றாக தான் இருக்கும். எனவே சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்கம் இங்கு பெரிதாக இருக்கும். இந்திய அணியில் அக்ஷர் பட்டேலை நீக்கிவிட்டு ஷர்துல் தாக்கூரை கொண்டு வரலாமா என்ற திட்டம் போடப்பட்டு வந்தது. ஆனால் அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜடேஜா என 3 ஸ்பின்னர்களுமே இங்கு தேவை என தோனி கூறிவிட்டாராம்.

ப்ளேயிங் 11 மாற்றம்
எனவே 3வது ஒருநாள் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் எந்தவித மாற்றமும் இன்றி இந்திய அணி களமிறங்கவுள்ளது. மேலும் நாளைய போட்டியின் போது தோனியும் இந்திய அணியுடன் இருக்கவுள்ளார். போட்டிக்கு இடையே பல அறிவுரைகளை அவர் கொடுக்கவுள்ளதாக தெரிகிறது. இதனால் எப்படியும் இந்தியா வென்றுவிடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications