For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8 இன்னிங்ஸில் சொதப்பல்.. ரோஹித் சர்மாவை இந்தியாவுக்கு அனுப்பிவிடுங்கள்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

அடிலெய்டு: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 இன்னிங்ஸ்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. அடிலெய்டு டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பியதால், அவரை இந்தியாவுக்கே மீண்டும் விமானம் ஏற்றி பிசிசிஐ அனுப்ப வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர்.

அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 180 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை குவித்து, 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

ind vs aus border gavaskar trophy rohit sharma

இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரு இன்னிங்ஸ்களிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதில் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கால் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ரோஹித் சர்மா 92 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், தற்போது நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியுடன் இணைந்தார்.

தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டால், ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க முன் வந்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் ரோஹித் சர்மாவுக்கு இருப்பதால், இந்திய அணிக்கு பலனளிக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் இரு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மா 3 மற்றும் 6 ஆகிய ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.

இதனால் கடைசியாக ஆடிய 8 இன்னிங்ஸ்கள் ரோஹித் சர்மா மொத்தமாக 101 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் கேப்டனாகவும் சொந்த மண்ணில் 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த நிலையில், தற்போது 4வது தோல்வி லோடிங்கில் உள்ளது. இதனால் வெளிநாடுகளில் ரோஹித் சர்மாவின் அணுகுமுறை இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருமா என்ற ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே ரோஹித் சர்மா 2023ஆம் ஆண்டில் இருந்து வலதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்துகளில் மட்டும் 13 முறை ஆட்டமிழந்திருக்கிறார். இந்திய அணியில் வேறு எந்த வீரருக்கும் பேட்டிங் டெக்னிக்கில் இப்படியான சிக்கல்கள் இல்லை. இதனால் இந்திய அணியின் கேப்டனாக பும்ராவை அறிவித்து, ரோஹித் சர்மாவை விமானம் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Saturday, December 7, 2024, 20:13 [IST]
Other articles published on Dec 7, 2024
English summary
IND vs AUS: Fans angry after India Captain Rohit Sharma Scored just 101 runs in the last 8 innings in Test Cricket - 8 இன்னிங்ஸில் தொப்பல்.. ரோஹித் சர்மாவை இந்தியாவுக்கு அனுப்பிவிடுங்கள்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+