மும்பை : இந்திய அணி வீரர்களை மதிப்பதாகவும் அதற்காக எங்களால் சும்மா போக முடியாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன் லயான் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறது.
