மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் இந்திய அணி வீரர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை தழுவி இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, தற்போது நாங்கள் ஐந்தாவது டெஸ்ட் போட்டி குறித்து யோசிக்கவில்லை. பிரிஸ்பேனில் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய நினைப்பாக இருக்கின்றது.
