கவுகாத்தி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக்சாகர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இதனால் இன்னும் ஐந்து மாதத்தில் இந்தியா விளையாட உள்ள போட்டிகளை வைத்து அணியை கட்டமைக்கும் பணி நடைபெறுகிறது.
