ரஹானே
விராட் கோலி இல்லாத நிலையில், வழக்கமான துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே அணியின் கேப்டனாக இரண்டாவது டெஸ்டில் செயல்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் அணியின் மூத்த வீரர் புஜாரா துணை கேப்டனாக செயல்பட்டார்.
துணை கேப்டன்
மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடைபெற உள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோஹித் சர்மா இந்த டெஸ்டில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிலையில், புஜாராவை நீக்கி விட்டு, ரோஹித் சர்மா துணை கேப்டன் பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
ரோஹித் செயல்பாடு
இது பற்றி இந்திய அணி வட்டாரம் கூறுகையில், ரோஹித் சர்மா நீண்ட காலமாக ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கோலி இல்லாத நிலையில் பல முறை அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
முடிவுகள்
தற்போது விராட் கோலி இல்லாத நிலையில் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் முடிவுகளை எடுக்கும் முக்கிய வீரர்கள் குழுவில் இடம் பெற்று இருக்கிறார். அதே சமயம், அவரது கேப்டன்சி சிறப்பாக இருக்கும் நிலையில், புஜாராவை நீக்கி விட்டு அவரை துணை கேப்டனாக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிக போட்டி
ரோஹித் சர்மா இல்லாததால் தான் புஜாராவுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. தற்போது ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிய நிலையில் அவருக்கே துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், புஜாரா, ரோஹித் சர்மாவை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.