For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே நாளில் 5 சாதனை படைத்த இந்திய அணி.. 147 ஆண்டுக்கால வரலாற்றில் எந்த அணியும் செய்தது கிடையாது

கான்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் இந்திய அணி 5 சாதனைகளை ஒரு அணியாக படைத்திருக்கிறது. 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த ஒரு அணியும் நிகழ்த்தியது கிடையாது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் தற்போது நடைபெறும் 9 டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற வேண்டும். இதில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சொந்த மண்ணில் நடைபெறுகிறது.

ind vs ban kanpur test rohit sharma virat kohli

அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறுகிறது. இதனால் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வென்றால் கூட இந்திய அணி பைனலுக்கு செல்ல முடியும். இந்த சூழலில் தான் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு நாள் மழையால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதனால் எஞ்சி இருக்கும் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக ஆடி பெரிய ஸ்கோரை குவித்து வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்த முயற்சி செய்து வருகிறது. முதலில் வங்கதேச அணி 233 ரன்கள் எடுக்க இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி வந்தனர்.

ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட் விளையாடியது போல் ரன்களை சேர்த்து வந்தனர். குறிப்பாக ரோகித் சர்மா எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளின் சிக்ஸர்களை விளாசினார். இதேபோன்று ஜெயஸ்வாலும் தன்னுடைய பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 19 பந்துகளில் எல்லாம் அரை சதம் அடித்து அசத்தியது.

இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிவேகமாக அடிக்கப்பட்ட அரை சதம் ஆகும். இதே போன்று ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலம் இந்திய அணி 10.1வது ஓவரில் 100 ரன்கள் எட்டி அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிவேகமாக 100 ரன்கள் அடித்தது முதல் முறையாகும். இதேபோன்று இந்தியா தொடர்ந்து அதிரடி காட்டியதால் 18 புள்ளி இரண்டாவது ஓவரில் 150 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டியது.

இதிலும் இந்திய அணி அதிவேகமாக 150 ரன்களை எட்டி சாதனை படைத்தது. அது மட்டுமில்லாமல் 24.2 ஓவர்கள் எல்லாம் இந்திய அணி 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அதிவேகமாக 200 ரன்கள் அடித்தது இதுவே முதல் முறையாகும். இதேபோன்று 30.3 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50, 100, 150 ,200 ,250 ஆகிய ரன்களை அதிவேகமாக எட்டிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா படைத்திருக்கிறது..

Story first published: Monday, September 30, 2024, 17:03 [IST]
Other articles published on Sep 30, 2024
English summary
Ind vs Ban - India cricket team creates 5 World record today in Kanpur test ஒரே நாளில் 5 சாதனை படைத்த இந்திய அணி.. 147 ஆண்டுக்கால வரலாற்றில் எந்த அணியும் செய்தது கிடையாது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+