நியூயார்க் : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணி தொடருக்கு தயாராகும் விதமாக வங்கதேசத்துக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.
இதில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். நியூயார்க் மைதானத்தில் முதன்முறையாக இந்திய அணி விளையாடுகிறது. இங்குதான் அயர்லாந்து, பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டங்கள் நடைபெறுகிறது.
