கட்டாக்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சதம் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்த கேப்டன் ரோஹித் சர்மா போட்டி முடிந்த பின் தனது ஆட்டம் பற்றி பேசினார்.
ரோஹித் சர்மா பேசியதாவது - "களத்தில் நின்று, அணிக்காக ரன்கள் எடுத்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. தொடரின் முடிவு தீர்மானிக்கப்படும் முக்கியமான போட்டி இது. ஆனால் நான் எப்படி பேட் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பிரித்து திட்டமிட்டேன். ஒருநாள் போட்டி என்பது டி20-களை விட நீண்டது, டெஸ்ட்டுகளை விடக் குறைவு, அதை நான் பிரித்துப் பார்க்க விரும்பினேன். முடிந்தவரை ஆழமாக பேட் செய்ய விரும்பினேன்."

"இந்த ஆடுகளத்தைப் பார்க்கும்போது - நீங்கள் கருப்பு மண்ணில் விளையாடும்போது, அது கொஞ்சம் வழுக்கும். ஆரம்பத்தில் பேட்டின் முழு முகத்தையும் காட்ட வேண்டும். பின்னர் அவர்கள் உடலை நோக்கி பந்து வீசினார்கள். ஸ்டம்புகளுக்கு குறி வைத்தார்கள். அங்குதான் நான் எனது திட்டத்தைத் பயன்படுத்தி இடைவெளிகளைப் பயன்படுத்தி ரன் குவிக்க முயற்சித்தேன்."
"கில் மற்றும் ஸ்ரேயாஸிடமிருந்தும் நல்ல ஆதரவு கிடைத்தது. கில்லுடன் பேட் செய்வது எனக்கு பிடித்தமானது. அவர் மிகவும் கிளாஸிக் வீரர். சூழ்நிலையால் அவர் அதிகமாகப் பதட்டமடைய மாட்டார். கில்லுக்கான புள்ளிவிவரங்களும் நன்றாகவே உள்ளன."
"ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்கள் மிகவும் முக்கியம். அங்குதான் ஆட்டம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம். மிடில் ஓவர்களைக் கட்டுப்படுத்தினால், கடைசி சில ஓவர்களை பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. மிடில் ஓவர்கள் மிகவும் முக்கியம். நாக்பூரில்கூட, நாங்கள் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளைப் பெற்றோம்."
"நீங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்கும்போது, ரன் எடுப்பது எளிதானது அல்ல. நாங்களும் தொடர்ந்து சிறப்பாக விளையாட விரும்புகிறோம். நாங்கள் எதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எதுவும் குறிப்பிட்ட இலக்கு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு வீரராகவும், அணியாகவும் தொடர்ந்து சிறப்பாக விளையாட விரும்புகிறோம். அதுதான் நாங்கள் செய்ய விரும்புவது. வீரர்கள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் வரை, அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை." என்றார் ரோஹித் சர்மா.