மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கேட்டுக்கொண்டார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் போட்டி, பும்ராவின் இந்த தொடரின் கடைசி ஆட்டமாக இருக்கலாம்.
பதான், பும்ராவின் பங்களிப்புகளைப் பாராட்டினார், ஆனால் அவர் தேவைப்படும் சூழலில் தனது முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். முழு முயற்சியை வழங்க முடியாத பட்சத்தில், ஓய்வு எடுப்பது நல்லது என்றும் முன்னாள் ஆல்-ரவுண்டர் கூறினார்.

இது குறித்து பேசிய அவர்,"நான் பும்ராவை பெரிதும் மதிக்கிறேன். அவரது திறமை அபாரமானது. ஆனால், இந்தியாவுக்காக விளையாடும்போது, நீங்கள் உங்கள் முழு திறனையும் வழங்க வேண்டும். ஐந்து ஓவர் ஸ்பெல் பற்றி பேசும்போது, ரூட் வரும்போது ஆறாவது ஓவரை வீசாமல் இருக்கக் கூடாது. முழுவதையும் கொடுக்க வேண்டும்.
இல்லையெனில் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும். நாடு அல்லது அணிக்காக விளையாடும்போது, அணி எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும்," என்று பதான் தெரிவித்தார்.கிரிக்கெட் வீரராக மாறிய வர்ணனையாளரான பதான், பும்ரா களத்தில் எடுத்த முயற்சிகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் லார்ட்ஸ் டெஸ்டில் ஐந்தாவது நாள் காலையில் 9.2 ஓவர்கள் வீசியதைப் போலவும், இரண்டாவது செஷனில் மேலும் 10 ஓவர்கள் வீசியதைப் போலவும், பும்ரா தன்னை மேலும் உயர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் WCL 2025-ல் இந்தியா சாம்பியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இர்பான் பதான், இந்தியாவுக்கு போட்டிகளை வென்று கொடுக்க பும்ரா ஸ்டோக்ஸின் உறுதியைப் போல காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இத்தகைய செயல்பாடுகள் உலகின் சிறந்த வீரர் என்ற புகழை நீண்ட காலம் தக்கவைக்க அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். "பும்ரா முயற்சி எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பவில்லை. அவர் ஓவர்களை வீசியுள்ளார், அதில் சந்தேகமில்லை. ஆனால், அணிக்காக கூடுதல் மைல் செல்ல வேண்டும். இந்தியாவுக்கு தொடர்ந்து போட்டிகளை வென்று கொடுத்தால், பும்ரா நீண்ட காலம் முதலிடத்தில் இருப்பார். அணிக்கு தேவைப்படும்போது கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.
பென் ஸ்டோக்ஸ் அதைச் செய்தார், ஜோஃப்ரா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதைச் செய்தார்," என்று பதான் கூறினார்.இதனிடையே, சக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஜூலை 23-ல் தொடங்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா பங்கேற்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.