பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, பர்மிங்காமில் உள்ள புகழ்பெற்ற எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா, தொடரை 1-1 என சமன் செய்ய இந்தப் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியுள்ளது.
வெற்றிக்கான தீவிர முயற்சியில், இந்திய அணி தங்கள் பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்களைச் செய்தது. சாய் சுதர்சன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. ஆனால், இந்த பிளேயிங் லெவன் குறித்து, குறிப்பாக குல்தீப் யாதவ் இல்லாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பேசிய சௌரவ் கங்குலி, "இந்திய அணி தங்களின் சிறந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தது. இதுவே இந்தியாவுக்கு வெற்றி பெற சிறந்த வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி ரன்களைக் குவித்தால், அது வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்." என்று கூறி, குல்தீப் யாதவ் அணியில் இல்லாதது குறித்து தனது அதிருப்தியை சூசகமாகத் தெரிவித்தார்.
இந்திய அணியின் மற்றொரு ஜாம்பவான் பேட்ஸ்மேனான சுனில் கவாஸ்கரும், குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது குறித்து ஆச்சரியம் தெரிவித்தார். "பிட்ச்சில் சிறிது சுழற்சி இருக்கும் நிலையில், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படாதது எனக்கு சற்று குழப்பமாக உள்ளது," என்று அவர் கூறினார்.
v “இது முட்டாள்தனம்.. நம்பர் 1 வீரருக்கு இந்திய அணியில் இடமில்லையா”.. கிழித்து தொங்க விட்ட ஸ்டெய்ன்முதல் டெஸ்டில் விக்கெட்டுகளை எடுக்கத் தவறிய பந்துவீச்சை வலுப்படுத்தாமல், பேட்டிங்கை வலுப்படுத்தியதை கவாஸ்கர் சுட்டிக்காட்டினார். "உங்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நீங்கள் எதிர்பார்க்கும் ரன்களைக் கொடுக்கவில்லை என்றால், வாஷிங்டன் (7வது இடத்தில்) அல்லது நிதிஷ் ரெட்டி (8வது இடத்தில்) அதைச் செய்ய மாட்டார்கள்."
"ஏனெனில், முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது பேட்ஸ்மேன்கள் அல்ல. முதல் போட்டியில் 830 ரன்களுக்கு மேல் எடுத்தீர்கள். எனவே, நீங்கள் பலப்படுத்த வேண்டியது விக்கெட் எடுக்கும் துறையைத்தான், பேட்டிங்கை அல்ல," என்று கவாஸ்கர் திட்டவட்டமாகக் கூறினார்.