துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சாஹல் தனது மனைவியை பிரிந்து வாழும் நிலையில், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் அவர் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி பைனல் போட்டியில் வந்து பார்த்திருக்கிறார். சாகலும் நடன கலைஞருமான தனுஸ்ரீ வர்மாவும் கடந்த டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டதிலிருந்து பல சர்ச்சைகளும் புகைப்படங்களும் வெளியானது. சாகலின் மனைவி தனுஸ்ரீ பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் உடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. மேலும் மனைவி தனஸ்ரீ பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இந்த நிலையில் சாகலும் தனுஷின் பிரிந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்ய போவதாகவும் செய்திகள் வந்தன. எனினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. இந்த சூழலில் மனைவியை விட்டு பிரிந்து இருந்த சாகல் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது.

பிரபல ஆர் ஜே வான மகாவஷ் என்ற பெண்ணுடன் சாகல் சுற்றுவதாக கூறப்பட்டது. இருவரும் காதலித்து வருவதாகவும் செய்திகள் உலா வந்தது. எனினும் இதனை ஆர்ஜே மகாவஷ் மறுத்து, இது வெறும் வதந்தி என்றும் அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்றும் கூறி வந்தார். இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக சாகலும் ஆர் ஜே மகா வருஷம் துபாய் வந்திருந்தார்கள்.
இருவரும் பக்கத்து பக்கத்து சீட்டில் அருகே நெருக்கமாக அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டு இந்த போட்டியை பார்த்து ரசித்தார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் சாகலும் மகாவஷ்ஷும் காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் தனுஸ்ரீ வேறொரு ஆணுடன் சென்ற நிலையில் சாகல் செய்தது தவறு இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.