பாகிஸ்தான் அணியின் இந்த நிலையைப் பார்த்தால் மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான தகுதி பாகிஸ்தான் அணியிடம் இருக்கின்றதா என்பதை யோசிக்க தோன்றுகிறது. அனைத்தும் இறைவனுக்கே தெரியும். இந்த கேள்வியை நான் ரசிகர்களிடமே விட்டுக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் அணி 11 ஓவர் முடிவில் 80 ரன்கள் எடுத்திருந்தார்கள். 160 ரன்கள் இலக்கு இருந்தால் நிச்சயம் அதனை எட்டுவது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். ரிஸ்வான் இன்னும் ஒரு இருபது ரன் அடித்து இருந்தால் கூட பாகிஸ்தான அணி வெற்றி பெற்றிருக்கும். மூளையை பயன்படுத்தி நமது வீரர்கள் விளையாடவில்லை.பாகிஸ்தான் வீரர்கள் செய்த செயலை பார்க்கும்போது பல கேள்விகள் இருக்கிறது.

அவர்கள் விளையாடிய விதம், செயல்பட்ட முறை அனைத்துமே, கேள்விகளை எழுப்புகிறது. பாகிஸ்தான் அணியை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.நிச்சயம் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் சோயிப் அத்தர் கூறியிருக்கின்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் சோயிப் அத்தர் கூறியிருக்கின்றார்.