ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஜோகானஸ்பர்க் நகரில் இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கான பிளையிங் லெவன் அறிவிக்கப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் பிளேயிங் லெவனின் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் ரிங்கு சிங் பட்டையை கிளப்பி இருக்கிறார். தமக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்தியா ஒரு சரியான ஃபினிஷர் இல்லாமல் தடுமாறி வருகிறது.
