சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா மண்ணில் அசாரூதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி உள்ளிட்ட இந்திய கேப்டன்களால் செய்ய முடியாத சாதனையை ரோகித் சர்மா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மும்பை அணி முடிவை எடுத்திருந்தாலும், ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் வாழ்க்கையையே மும்பை அணியின் முடிவு கேள்விக்குறியாக்கியுள்ளது.
