கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புத்தாண்டான ஜனவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் குழு அணியில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள போகிறது.
