முதல் போட்டி பிட்ச்
முந்தைய தினம் நடைபெற்ற முதல் போட்டிக்கு முன் மழை பெய்து பிட்ச் ஈரப்பதமாக இருந்தது. அதனால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சிரமமாக இருக்கும் என கருதப்பட்டது. அதனால், அப்போது டாஸ் வென்ற கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆடுகளம் எப்படி?
இரண்டாவது போட்டிக்கு முந்தைய நாள் இரவும் மழை பெய்தது. அதனால், ஆடுகளம் ஆங்காங்கே ஈரப்பதமாக இருந்தது. முதல் போட்டி போலவே பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என முன்னாள் வீரர்கள் கூறினர்.
விமர்சகர்கள் கருத்து
அதனால், இப்போதும் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என விமர்சகர்கள் கூறி இருந்தனர். அதனால், கோலி டாஸ் வெல்ல வேண்டும், அப்போது தான் முதலில் பந்து வீசலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
கோலி எடுத்த முடிவு
ஆனால், டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்து எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தார். தன் முடிவு குறித்து பேசிய கோலி, இப்போது பிட்ச் நன்றாக இருக்கிறது. நேற்று இருந்த ஈரப்பதம் இப்போது இல்லை. மேலும், பிட்ச் செல்லச் செல்ல மந்தமாக மாறி விடும் என கருதுகிறோம் என்றார்.
வெற்றி பெறலாம்
கோலி எடுத்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், இந்திய அணியின் திட்டம் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. டி20 போட்டியில் வெற்றி - தோல்வி சில ஓவர்களில், சில பந்துகளில் மாறி விடும் என்பதால் கோலி எடுத்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக மாறலாம்.