
இந்திய வீராங்கனைகளின் தரம் உயர்வு
மகளிர் ஐ.பி.எல். போட்டி கொண்டு வர வேண்டும் என்றால் ஆட்டத்தின் பொதுவான தரம் நன்றாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். உலக கோப்பை போட்டியின் புள்ளி விவரங்களை பார்த்தால் எங்களது தரம் உயர்ந்து இருப்பதை மிக தெளிவாக புரிகிறது.

300 ரன்கள் குவிப்பது எளிது
இந்த உலக கோப்பை போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எளிதாக குவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு அணியிலும் சதம் அடிக்கும் வீராங்கனைகளும், 5 விக்கெட்டுகள் வீழ்த்தக்கூடிய திறன் படைத்த வீராங்கனைகளும் இருப்பதை பார்க்க முடிந்தது.

ஐபிஎல் வேண்டும்
ஐ.பி.எல். போட்டி உள்ளூர் வீராங்கனைகளின் தரத்தை உயர்த்த உதவிகரமாக இருக்கும். ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்ததாகும். இது போன்ற லீக் போட்டிகள் வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்த வழிவகுக்கும்.

பெருமையாக இருக்கிறது
மேலும் வெளிநாட்டு வீராங்கனைகளுடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைப்பது நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்பது எனது எண்ணமாகும். இந்திய பெண்கள் அணி மக்கள் மனதை அதிகம் கவர்ந்து இருப்பது பெருமை அளிக்கிறது.

எல்லா போட்டிகளுக்கும் லைவ் வேண்டும்
தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுபோல் எல்லா போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்தால் மேலும் அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும்." என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











