
சுப்மன் கில்
இதனையடுத்து முதலில் களமிறங்கிய சுப்மன் கில், ரோகித் சர்மா ஜோடி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தொடக்கத்தை அளித்தது. சுப்மன் கில் தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி பாயிண்டில் நின்ற பில்டரிடம் கேட்ச்சாகி டக் அவுட்டாகி வெளியேறினார்.

கோல்டன் டக்
இதனைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, வெளியே சென்ற பந்தை டிரைவ் செய்ய, அது சிலிப்பில் நின்ற ஃபில்டரிடம் கேட்சாக பிடிப்பட்டது. இதனால் ரோகித் 13 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2வது முறையாக ஸ்டார்க் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார்.

ராகுல் அதிர்ச்சி
இதனால் 32 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா விளையாடிய நிலையில், ராகுல், கோலி ஜோடி அணியை காப்பாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேஎல் ராகுலும் 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

தடுமாறும் இந்தியா
இதன் பிறகு ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது. ஆனால் அவர் வெறும் 3 பந்துகளை கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதனால் தற்போது இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, இதில் ஸ்டார்க் மட்டுமே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications