
ஆடுகளம்
அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். இந்த தொடரில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களிலேயே இது தான் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் முயன்றால் விக்கெட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

டாஸ்
இந்த நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோகித் பேச்சு
இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நாங்களும் பேட்டிங் செய்ய தான் திட்டமிட்டோம். டாசை இழந்துவிட்டதால் தற்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துவிட்டது. தோல்விக்கு பிறகு எங்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்தது. ஒரு அணியாக என்ன தவறு செய்தோம் என்பதை மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது.

பிளேயிங் லெவன்
ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல், முகமது ஷமி, உமேஷ் யாதவ்


Click it and Unblock the Notifications











