அகமதாபாத்: 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி செய்த தவறை, தற்போது ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்துள்ளார்.
2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது எதிர்முனையில் நின்றிருந்த ரிக்கி பாண்டிங் முதல் பேட்டிங் ஆடுவதில் எங்களுக்கு எந்த சிரமும் இல்லை என்று கூறி அப்போது மவுனமாக சிரித்தார். அதன்பின் அவர் ஆடிய ருத்ர தாண்டவத்தில் இந்திய அணியே கதி கலங்கி நின்றது.
