பெங்களூரு: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஏன் தன்னை சேர்க்க வேண்டும் என்று ஒரே இன்னிங்ஸ் மூலமாக நிரூபித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை சேர்த்தது. இந்திய அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
