சிட்னி: பெரிய போட்டிகளின்போது எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நாளை உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் ரோஹித் சர்மா போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
அரை இறுதியைப் பொறுத்தவரை 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தான் முன்னேறிய 6 அரை இறுதிப் போட்டிகளிலும் வென்றுள்ளது. இருப்பினும் சிட்னி மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், இந்தியா தற்போது நல்ல பார்மில் உள்ளதாலும் ஆஸ்திரேலியத் தரப்பு சற்று கவலையுடன்தான் உள்ளது.