அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை விளையாடவுள்ளன. 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா, 2003 உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ஏராளமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நாளை மாற்றம் இருக்குமா என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
