Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? ரோகித் சர்மா பதில்!

அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை விளையாடவுள்ளன. 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா, 2003 உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ஏராளமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நாளை மாற்றம் இருக்குமா என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

INDIA vs AUSTRALIA World Cup FINAL 2023: Indian Captain Rohit Sharma answers for Ravichandran Ashwin in the Playing XI against Australia


ஏனென்றால் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் என்று 2 அபாயகரமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்களை சமாளிக்க இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், உலகக்கோப்பை தொடரின் தொடக்க போட்டிகளில் முகமது ஷமியை பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய முடியவில்லை. ஆனால் சிராஜ் மற்றும் பும்ராவுடன் அவர் தொடர்ந்து உதவி செய்து வந்தார்.

அதேபோல் முகமது ஷமி பெஞ்ச் செய்யப்பட்ட போது, அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்று தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தோம். இதனால் முகமது ஷமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு வந்த போது, அவரின் ஆட்டத்தை அனைவருக்கும் காட்டியுள்ளார். அதேபோல் நாளைய போட்டிக்கான பிளேயிங் லெவனில் இன்னும் முடிவு செய்யவில்லை. பிட்சின் தன்மையை பார்த்துவிட்டு, எதிரணியின் பலம் மற்றும் பலவீனத்தை பொறுத்து வீரர்களை தேர்வு செய்வோம்.

அகமதாபாத் பிட்சில் சிறியளவில் புற்கள் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய பிட்ச் ஸ்லோவாக இருந்தது. அதனால் என்னுடைய புரிதல் அடிப்படையில், இதுவும் அதேபோல் இருக்கும். அதேபோல் கொஞ்சம் வானிலையிலும் மாற்றம் உள்ளது. அதனால் நாளை பனிப்பொழிவு எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியவில்லை. அதேபோல் போட்டியின் முடிவில் நிச்சயம் டாஸ் எந்த பங்கும் வகிக்காது. நாளைய ஆட்டத்தில் அஸ்வின் இருப்பாரா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

நாளை மீண்டும் ஒருமுறை பிட்சை பார்த்தபின் தான் முடிவு எடுப்போம். நங்களின் 12 அல்லது 13 வீரர்களை இறுதி செய்துவிட்டோம். என்னை பொறுத்தவரை அன்றைய நாளில் சிறந்த கிரிக்கெட்டை ஆடும் நிச்சயம் வெற்றிபெறும். கடந்த 10 போட்டிகளில் நாங்கள் என்ன செய்தோம் என்பது தேவையில்லை. அந்த போட்டிகளில் வென்ற மன உறுதியை மட்டும் எடுத்துக் கொண்டு வெற்றிக்காக விளையாட வேண்டும்.

எனது ஆட்டத்தை பொறுத்தவரை, அட்டாக்கிங் பாணியிலான ஆட்டத்தை விளையாட உலகக்கோப்பைக்கு முன்பே நினைத்திருந்தேன். ஆனால் அது எடுபடுமா என்பது தெரியாது. எனக்கு கிடைத்த குறைந்தபட்ச சுதந்திரத்தை கொண்டு விளையாடினே. அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வேறு மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். சீனியர் வீரர்கள் அப்படிதான் விளையாட வேண்டும். எனது திட்டத்தை மாற்றினேன். இறுதிப்போட்டி என்பதால் அதிகமாக ஆர்வம் கொள்ளவோ, அழுத்தத்தை எடுத்து கொள்வதோ தேவையில்லை என்று தெரிவித்தார்.
Story first published: Saturday, November 18, 2023, 19:53 [IST]
Other articles published on Nov 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+