அகமதாபாத்: இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்காக உலகக்கோப்பையை வெல்ல விரும்புவதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களமிறங்கவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
