அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மிட்செல் ஸ்டார்க்கின் தொடக்க ஓவர்களை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று வெங்கடேஷ் பிரசாத் எச்சரித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கவுள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 8வது முறையாக உலகக்கோப்பை பைனலில் விளையாடவுள்ளது. இதுவரை 7 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
