அகமதாபாத்: இந்திய அணிக்கு ஆதரவாக வரவுள்ள 1.3 லட்சம் ரசிகர்களையும் மைதானத்தில் அமைதியாக்குவதை விடவும், விளையாட்டில் வேறு மனநிறைவு கிடைக்காது என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. அகமதாபாத் மைதானத்தில் இந்த போட்டியை காண்பதற்காக 1.3 லட்சம் ரசிகர்கள் கூடவுள்ளனர். சாதாரணமாக இந்திய அணிக்கான ஆதரவு உச்சத்தில் இருந்து வரும் சூழலில், இறுதிப்போட்டியில் 1.3 லட்சம் ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவளிப்பார்கள் என்பது நிச்சயம். ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்கிய போது ரசிகர்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தார்கள் என்பதை பார்த்துள்ளோம்.
