IND vs ENG: பிளேயிங் 11 உள்ளே வரும் சீனியர் வீரர்.. சுந்தர், துபே நீக்கம்.. கம்பீர் திட்டம் என்ன?
லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் தொடரின் வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 19 அன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் எப்படியாவது வென்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், இந்திய அணியின் பிளேயிங் 11இல் இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்ய கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடைப்பகுதி காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். கார்டிஃப் போட்டியில் பேட்டிங் செய்த போது அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பிளேயிங் 11க்குள் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த போட்டியில் கோல்டன் டக்-அவுட் ஆன சிவம் துபே இந்த போட்டியில் நீக்கப்பட வாய்ப்புள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த போட்டியைத் தவறவிட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் தற்போது முழு உடற்தகுதியுடன் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் பிளேயிங் 11-இல் சேர்க்கவும் வாய்ப்பு உள்ளது.
கடந்த போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்த இஷான் கிஷனுக்கு பேட்டிங் வரிசையை வலுப்படுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகிய 2 வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு, குல்தீப் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பிளேயிங் 11க்குள் நுழைய உள்ளனர்.
ரோஹித் சர்மாவுக்கு இதுவே கடைசிப் போட்டி என செய்திகள் பரவி வரும் நிலையில் அவர் எப்படி ஆடப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பிசிசிஐ செயலாளர் சைக்கியா, ரோஹித் சர்மாவுக்கு இது கடைசிப் போட்டி அல்ல என தெளிவுபடுத்தி இருந்தாலும் ரோஹித்துக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் உள்ளது.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே எல் ராகுல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.


Click it and Unblock the Notifications
