
ரோகித் கேப்டன்சி
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய பின்னர் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அந்தவகையில் தனது முதல் தொடரிலேயே அபார வெற்றியை ரோகித் பெற்று கொடுத்ததால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜாகீர் நம்பிக்கை
இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மா எடுத்துவரும் முடிவுகள் அடுத்த உலகக் கோப்பை தொடரை அவர் குறிவைத்துள்ளது தெரிவதாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி தற்போது அடுத்த உலகக் கோப்பை தொடருக்காக ஆயத்தமாகி வருகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் ரோகித் சர்மா எடுக்கும் சில முடிவுகள் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்துகின்றன.

ரோகித் எடுத்த ரிஸ்க்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் வெங்கடேஷ் ஐயரை 3வது வீரராக களமிறக்கி அவர் ஒரு பரிசோதனையை நிகழ்த்தினார். அவரின் அந்த முடிவிலேயே, ரோகித் சர்மா அடுத்த உலகக் கோப்பையை குறி வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் தீடீர் திடீரென அணி வீரர்களை வேறு வரிசையில் களமிறக்கி பரிசோதனை செய்வது அடுத்த உலகக்கோப்பை தொடரில் வீரர்களின் பேட்டிங் வரிசைக்கு பிரச்னையில்லாமல் இருக்கும்.

எதிர்காலம்
அதுமட்டுமின்றி முக்கியமான போட்டிகளில் விக்கெட்டுகள் சரிந்து இக்கட்டான சூழ்நிலைகள் உருவானால், பேட்டிங் ஆர்டரை மாற்றி களமிறக்கும் முறைகள் பெரியளவில் கைக்கொடுக்கும். இந்த காரணத்தினால் தான் வீரர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை ரோகித் வழங்குவதாக தெரிகிறது. என்னை பொறுத்தவரை ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஆகியோரது ஆளுமை இந்திய அணிக்கு நல்ல எதிர்காலத்தை தரும் என ஜாஹீர் கான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











