
பின்னடைவு
இந்திய அணியை பொறுத்தவரை பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை முழுமையாக வீழ்த்திய உத்வேகத்துடன் உள்ளனர். இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியகுமார் யாதவும் காயம் காரணமாக விலகியுள்ளது பின்னடைவாக கருதப்படுகிறது.

திரும்பிய நட்சத்திரங்கள்
எனினும் ஜடேஜா, பும்ரா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது சாதகமாக பார்க்கப்படுகிறது. தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்க உள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதாக ரோகித் சர்மா தெரிவித்தார். அறிமுக வீரராக தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி
இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குகிறோம். அதனை இளைஞர்கள் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள் என்று நம்புவதாக ரோகித் கூறினார். ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் 37 ரன்கள் அடித்தால், சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இலங்கை அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியிடம் 4க்கு1 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்துள்ளது. எனினும் இந்திய சூழலில் அந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது அசலங்காசந்திமால், சானுக்கா போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். உள்ளனர்.

பிளேயிங் லெவன்
ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தாலும், பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய உத்தேச அணி, 1, இஷான் கிஷன், 2, ரோகித் சர்மா, 3, சஞ்சு சாம்சன், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, வெங்கடேஷ் ஐயர், 6, தீபக் ஹூடா 7, ஜடேஜா, 8, ஹர்சல் பட்டேல், 9, புவனேஸ்வர் குமார் , 10, பும்ரா, 11, சாஹல்


Click it and Unblock the Notifications











