ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, சமி, கில் ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாமலேயே இந்திய அணி 200 பந்துகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறது.
இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த நான்காவது இந்திய தொடக்க வீரர் மற்றும் 17வது இந்தியர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார்.
