
இலங்கை சீரிஸ்
ஆனால் இந்த டி20 தொடரில் இந்திய அணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மிகவும் பலமான அணியாக பார்க்கப்படும் இந்திய அணியில் டாப் ஆர்டரி அஸ்திவாரமே காணவில்லை என்பது போல செய்துள்ளனர் சீனியர் வீரர்கள். ஆம், முக்கிய வீரர்கள் அனைவருமே இந்த தொடரில் இருந்து திடீரென வெளியேறிவிட்டனர்.

வீரர்கள் விலகல்
துணைக்கேப்டன் கே.எல்.ராகுல், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சாளர் தீபக் சஹார் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிவிட்டனர். ஆனால் சீனியர் வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஓய்வு வேண்டும் எனக்கூறி அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கண்டுக்கொள்ளாத கோலி
அணியில் 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓய்வில் சென்ற கோலி மீண்டும் பபுளுக்குள் இணைய விருப்பப்படவில்லை. இதனால் இந்த இக்கட்டான சூழலில் இளம் வீரர்களை வைத்து தான் ரோகித் சர்மா சமாளிக்க வேண்டியுள்ளது.

கடும் அதிருப்தி
சீனியர் வீரராக இருப்பவர், அணியின் வெற்றி முக்கியம் என நினைத்து மீண்டும் வந்திருக்க வேண்டும். ஆனால் எந்தவித கவலையும் இன்றி ஓய்வெடுக்க சென்றிருப்பது தவறு என ரோகித் சர்மா ரசிகர்கள் விளாசி வருகின்றனர். ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகமே இந்த அதிருப்தியில் இருப்பதாக தான் தெரிகிறது.


Click it and Unblock the Notifications