ருதுராஜுக்கு இந்த முறையும் வாய்ப்பில்லை?.. இப்போது என்ன பிரச்சினை.. குழப்பத்தில் ரோகித் சர்மா!
லக்னோ: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் தொடங்கவுள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ருதுராஜின் சோகம்
சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு கடந்த 3 தொடர்களாக வாய்ப்பளிக்கபடாமல் இருந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20ல் மட்டும் வாய்ப்பு கொடுத்தனர். அதுவும் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் வெளியேறியிருந்ததால் கிடைத்தது. எனவே இலங்கை தொடரிலாவது வாய்ப்பு கிடைக்கும் என ஆவலுடன் காத்துள்ளார்.

என்ன சிக்கல்
ஆனால் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகும். அவரை முதல் 3 இடங்களுக்குள் களமிறக்கினால் தான் சரியாக விளையாடுவார். இல்லையென்றால் அவரை வைத்திருப்பதே பலனற்றதாகும். டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் அணி என்பதால் இதனையும் ரோகித் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே இஷான் கிஷானுடன் - சஞ்சு சாம்சன் களமிறங்கிவிட்டு, ரோகித் சர்மா 3வது வீரராக களமிறங்கலாம்.

என்ன சிக்கல்
ஆனால் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகும். அவரை முதல் 3 இடங்களுக்குள் களமிறக்கினால் தான் சரியாக விளையாடுவார். இல்லையென்றால் அவரை வைத்திருப்பதே பலனற்றதாகும். டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் அணி என்பதால் இதனையும் ரோகித் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே இஷான் கிஷானுடன் - சஞ்சு சாம்சன் களமிறங்கிவிட்டு, ரோகித் சர்மா 3வது வீரராக களமிறங்கலாம்.

குழப்பத்தில் ரோகித்
சஞ்சு சாம்சன் ஓப்பனிங் விளையாடினால் ருதுராஜ் கண்டிப்பாக வெளியே அமரவைக்கப்படுவார். அவரை மிடில் ஆர்டைரில் விளையாட வைக்க முடியாது. ஒருபுறம் நீண்ட நாட்களாக வாய்ப்புக்கொடுக்கவில்லை என்ற அழுத்தம், மற்றொரு புறம் ப்ளேயிங் 11 குழப்பம் என கேப்டன் ரோகித் சர்மா குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications