
ரோகித்தின் பிரச்சினை
ஆனால் ரோகித் சர்மாவால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ரோகித் சர்மாவின் மிகப்பெரிய பலம் புல் ஷாட் தான். அவர் அடித்தால், கட்டாயம் அந்த பந்து சிக்ஸர் தான் செல்லும் என ரசிகர்கள் நம்புவார்கள். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு புல்ஷாட்டே எமனாக வந்து நின்றுள்ளது. அதனை சற்றும் யோசிக்காமல் உள்ளார்.

பவுலர்கள் எடுக்கும் ரிஸ்க்
ரோகித் சர்மா நின்றுவிட்டால் சதமடிக்காமல் போகமாட்டார். எனவே அவரை முன்கூட்டியே அவுட்டாக்க, பவுலர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி, ரோகித் சர்மாவுக்கு ஆசையை தூண்டுகின்றனர். அவரும் ஆர்வக்கோளாறில் புல்ஷாட்டை ஆட முயன்று கேட்ச் கொடுத்து சொற்ப ரன்களுக்கு நடையை கட்டிவிடுகிறார்.

கவாஸ்கர் விடுத்த எச்சரிக்கை
இந்நிலையில் இதற்கு கவாஸ்கர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புல்ஷாட் அடிப்பது குறித்து ரோகித் யோசிக்க வேண்டும். அது அவருக்கு பிடித்த ஷாட்தான். இருப்பினும், தற்போது அதனை எதிரணி வீரர்கள் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். 2, 3 சிக்ஸர்கள் சென்றாலும் கவலையில்லை, தொடர்ந்து ஷார்ட் பால் போட்டு விக்கெட் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். ரோகித் சர்மாவும் பிடிவாதமாக அதனை தான் செய்கிறார்.

எப்போது அடிக்க வேண்டும்
எனவே இனி ரோகித் அதனை பெரிய பிரச்னையாக கருத்தில் கொள்ள வேண்டும். 3 பந்துகளை நன்றாக ஆடிவிட்டு, 4வது பந்தில் ஆட்டமிழப்பது சரியில்லை. 80, 90, 100 என ரன்களை குவிக்கும் வரை அவர் புல்ஷாட்களை அடிக்காமல் இருப்பது தான் அவருக்கு நல்லது என கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications